விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ஏஐ உள்கட்டமைப்புத் திட்டத்தை அறிவித்த ஜீத் அதானி!
மும்பை: அதானி குழும இயக்குநர் ஜீத் அதானி, விசாகப்பட்டினத்தை இந்தியாவின் முதன்மையான செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மையமாக மாற்றும் லட்சியத் திட்டங்களைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். எரிசக்தி தன்னிறைவு, டேட்டா சென்டர் வளர்ச்சி, உலகளாவிய கூட்டாண்மைகளை வலியுறுத்திய இத்திட்டம், AI பயன்பாட்டை விரைவுபடுத்தி செலவுகளைக் குறைத்து, விசாகப்பட்டினத்தை நாட்டின் AI எதிர்கால மையமாக நிலைநிறுத்தும் என்றார்.
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், கிஞ்சராபு ராமமோகன் நாயுடு, ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் முன்னிலையில் அவர் உரையாற்றினார். இந்தியாவின் AI தலைமை என்பது சாப்ட்வேர் கண்டுபிடிப்புகள் தாண்டி, எனர்ஜி, கனெக்ஷன், டேட்டா அமைப்புகளால் இயங்கும் பெரிய உள்கட்டமைப்பை உருவாக்குவதைப் பொறுத்தது என ஜீத் அதானி விளக்கினார்.

விசாகப்பட்டினம்
இந்தியாவில் தற்போது 1.3 ஜிகாவாட் டேட்டா சென்டர் திறன் உள்ளது.. விசாகப்பட்டினத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 ஜிகாவாட் திறன் உருவாக்கப்படவுள்ளது. "AI கோடிங் மொழியில் எழுதப்பட்டாலும், அது மின்சாரத்தில்தான் இயங்குகிறது" என ஜீத் அதானி குறிப்பிட்டார். மின்சாரச் செலவே கணினிச் செலவில் அதிகம் என்பதால், மலிவான, நம்பகமான மின்சாரம் AI பயன்பாட்டை அதிகரிக்க அவசியம். இந்தியாவுக்கு கட்டமைப்பு நன்மை உள்ளதாகவும், அதானி குழுமம் புதிய சூழலியல் அமைப்பை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பில் முக்கியமான மாற்றம் ஏற்படுவதாக ஜீத் அதானி சுட்டிக்காட்டினார். பல பத்தாண்டுகளாக மும்பை, சென்னை மையங்களாய் இருந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கிக் கம்பி இணைப்பு உள்கட்டமைப்பு மூலம் ஒரு புதிய டிஜிட்டல் நுழைவாயில் உருவாகிறது என்றார். இது இந்தியாவின் சர்வதேச இணைப்பை மறுவரையறை செய்து, டேட்டா பரிமாற்றத்தை மேம்படுத்தி, தாமதத்தைக் குறைக்கும். பெரிய அளவிலான AI செயல்பாடுகளை விரைவாக, திறம்பட செயல்படுத்தவும் உதவும்.
பாராட்டு
சந்திரபாபு நாயுடுவின் தலைமையில், விசாகப்பட்டினத்தை AI எதிர்கால மையத்தில் நிலைநிறுத்த ஆந்திர அரசு வேகமாகவும் தெளிவாகவும் செயல்படுவதாக ஜீத் அதானி பாராட்டினார். பெங்களூரு தொழில்நுட்பப் புரட்சிக்கு அடையாளமானதுபோல், விசாகப்பட்டினமும் AI புரட்சிக்கு அடித்தளம் அமைக்கும் என்றார். கூகிள் உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடனான பாட்னர்ஷிப், உலகளாவிய தொழில்நுட்பத் தலைமை, இணைப்புடன் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திறன்களை ஒன்றிணைக்கும் என்றும் அவர் கூறினார்.
100 பில்லியன் டாலர்
இந்தியாவின் AI வளர்ச்சிக்கு அதானி குழுமம் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ளதாக ஜீத் அதானி அறிவித்தார். இந்த முதலீடு கிரீன் எனர்ஜி மின்சாரம் கொண்ட ஆற்றல் உற்பத்தி, மேட்சி, டிஜிட்டல் நெட்வொர்க்குகள், டேட்டா சென்டர்கள் போன்ற ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும். எனர்ஜி செலவுகள் குறையும்போது AI கணினி செயல்முறை மாடல் பயிற்சி மற்றும் பிற செலவுகளைக் குறையும் என்றும் இது செயற்கை நுண்ணறிவை மலிவாகவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் என்றார்.
தனது உரையை முடிக்கும்போது, இந்தியா எதிர்காலத்தை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவை வடிவமைக்கும் AIக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தும் என்றார் ஜீத் அதானி. இந்த பயணம் விசாகப்பட்டினத்தில் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications