38 ஆண்டுகள் விமானங்களோடு "வாழ்ந்த" ஷிமோகா ராஜாராம்
பெங்களூர்: இந்திய விமானப்படையில் 38 ஆண்டுகளாக பணியாற்றிய ஏர் மார்ஷல் ராஜாராம் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஹொஸநகராவைச் சேர்ந்தவர் ஏர் மார்ஷல் ஹெச்.பி. ராஜாராம். 38 ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றிய அவர் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார். 1970களில் வாலிபராக இருந்த அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் இந்திய விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் விமானப்படை பணிக்கு விண்ணப்பித்தனர்.

நேர்முக காணலுக்கு டெல்லிக்கு அழைப்பார்கள், ரயிலில் செல்லலாம் என்று ஆசையுடன் இருந்த ராஜாராம் மற்றும் அவரது நண்பர்களுக்கு மைசூரில் நேர்காணல், உடல் தகுதி தேர்வு நடைபெற்றது.
இது குறித்து ராஜாராம் கூறுகையில்,
என் தந்தை ஒரு டெய்லர். 7 பேரில் நான் தான் மூத்தவன். 1976ம் ஆண்டு விமானப்படையில் சேர்வதற்கான உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டேன். 1977ம் ஆண்டு விமானப்படையின் நிர்வாக பிரிவில் பணி கிடைத்தது. அதற்கு முன்பு ஒரு ஆண்டு பயிற்சி பெற்றேன். துவக்க காலத்தில் நான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுவது மிகவும் கடினம்.
இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டபோது 1989ம் ஆண்டு நான் வவுனியா விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றியது சவாலாக இருந்தது. அந்த அனுபவத்தை மறக்க முடியாது என்றார்.
மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர் மரபணுவியல் தொடர்பாக பி.ஹெச்.டி. படிக்கவும் விண்ணப்பிதிருந்தார். ராஜாராம் என்றால் தங்க மனசுக்காரர் என்று சகாக்களிடம் பெயர் எடுத்துள்ளார்.
விசிஷ்ட் சேவா பதக்கம் மற்று அதி விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்ற ராஜாராம் நல்ல பேட்மிண்டன் வீரர் ஆவார். ஓய்வுக்கு பிறகு அவர் பெங்களூரில் செட்டில் ஆகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications