கேரளாவை ஆட்டிப்படைக்கும் எலி காய்ச்சல்.. 2 நாளில் 23 பேர் பலி.. வெள்ளத்திற்கு பின்பும் சோகம்!
கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கேரளாவை மேலும் சோதிக்கும் வகையில் அங்கு எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அங்கு அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

வெள்ளத்தால் பலி
அங்கு வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 2500க்கும் அதிகமானோர் மோசமாக காயம் அடைந்துள்ளார். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து இருக்கிறார்கள். 2.5 லட்சம் பேர் உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எலி காய்ச்சல் பரவுகிறது
தற்போது அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது. சாதாரண காய்ச்சல் போல ஏற்படும் இந்த நோய் எலியின் சிறுநீரகம் மூலம் பரவ கூடியது. எலியின் சிறுநீர், கழிவு பொருட்கள் கலந்த நீரில் தொடர்பு ஏற்பட்டு இருந்தால் இந்த காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வாந்தி, பேதி, மயக்கம், உடல் எடை குறைவு தொடங்கி மரணம் வரை ஏற்படும்,

எத்தனை பலி
இந்த காய்ச்சல் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை கேரள சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது. அதேபோல் இந்த அறிகுறியுடன் இன்னும் நிறைய பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பலர் இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பரவும் பீதி
இந்த காய்ச்சல் வேகமாக பரவக்கூடியது. இதனால் எளிதாக மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த காய்ச்சல் அறிகுறியுடன் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் பீதி ஏற்பட்டுள்ளது.
-
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
காற்றழுத்த தாழ்வு பாதை.. இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு! -
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications