வருகிறது அபாயகரமான புயல் ''லெஹர்'' - பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!
மும்பை: ஹெலன் புயல் ஆந்திராவைத் தாக்கி ஓய்ந்த நிலையில் தற்போது அந்தமான் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு லெஹர் என பெயரிட்டுள்ளனர்.
இந்தப் புயல் அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பேரழிவை இப்புயல் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. இந்தப் புயலானது ஆந்திராவை நோக்கி நகர்வதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவுதான் இது ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு நிலையாக இருந்தது. இன்று காலையில் இது புயலாக மாறியது. இந்த சீசனில் வரும் 3வது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நிலவரப்படி அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு தெற்கு தென் கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் இது மையம் கொண்டிருந்தது. இது வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும், ஹட் பே, லாங் தீவுகளுக்கு இடையே இன்று இரவு கடக்கும்.
மறுபடியும் வங்கக் கடலின் தென் கிழக்கில் இது உயிர்த்தெழுந்து மேலும் தீவிரமடைந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்து வரும்.
இதை அந்தமானைத் தாக்குவதற்குள்ளாகவே புயல் என்று அறிவித்து விட்டதால், ஆந்திரக் கரையை இது தாக்கும்போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அதி தீவிரப் புயலாக இருக்கும் என்பதால் இப்போதே ஆந்திர மாநில கடலோரப் பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்தப் புயலானது ஆந்திர கரையைத் தாக்குவதற்கு இன்னும் 4 முதல் 5 நாட்களாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு நிலப்பரப்புக்கு வெகு அருகில் வந்ததும்தான் ஒரு புயலுக்கு பெயர் வைப்பார்கள். ஆனால் மிக தொலைவில் உள்ள புயலுக்கு பெயர் வைத்து பெரும் புயல் என அறிவித்திருப்பதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications