டெல்லி மெட்ரோவில் ஜாலி ரைடு போன கீதா !
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியுள்ள கீதா டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். மேலும் மெட்ரோ அருங்காட்சியகத்தையும் சுற்றிப் பார்த்தார்.
பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியுள்ள கீதா எதி பவுன்டேஷன் உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். மெட்ரோ ரயிலில் சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டார்.

பின்னர் டெல்லியில் உள்ள மெட்ரோ அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். அருங்காட்சியகத்தில் அவருக்கு அங்கிருந்த பொருட்கள் பற்றி சைகை மொழியில் தெரிவிக்கப்பட்டது என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேஷனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்தார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கீதா சந்தித்தார்.
8 வயது இருக்கையில் வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற வாய் பேச முடியாத, காது கேளாத கீதா 15 ஆண்டுகள் கழித்து திங்கட்கிழமை நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications