பக்ரீத் தினத்தன்று ரத்ததானம் முகாம் நடத்தும் ராஜஸ்தான் அரசு.. புதிய சர்ச்சை
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் இறைச்சிக்கு தடைவிதித்த சர்ச்சை நீடிக்கும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் அரசின் புதிய உத்தரவு புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் 2 முக்கிய பெருநாள்களில் ஒன்றான பக்ரீத் வரும் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

பக்ரீத் நாளான செப்டம்பர் 25 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்த தலைவர் தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாள் வருகிறது. எனவே அன்று பள்ளி, கல்லூரிகளை திறந்து வைத்து ரத்த தானம் முகாம்களை நடத்துமாறு வசுந்த்ரா ராஜே தலைமையிலான அரசு அறிவித்துள்ளது புதிய சர்ச்சையினை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே இறைச்சிக்குத் தடை விதித்த விவகாரம் ராஜஸ்தானில் புயலைக் கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் இது விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பக்ரீத் அன்று ரத்ததான முகாம் நடத்துமாறு அந்த மாநில அரசு உத்தரவிட்டிருப்பது புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.












Click it and Unblock the Notifications