மோடிக்கு தாத்தாவா பணம் கொடுக்கிறார்: காங்கிரஸ் பதிலடி
டெல்லி: மாநிலங்களுக்கான நிதி ராகுலுக்கு மாமா வீட்டில் இருந்தா வருகிறது என்று கேள்வி கேட்ட பாஜக பிரதமர் வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் மாநில வளர்ச்சிக்காக மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் செயல்பட்டுவரும் மத்திய அரசு நிதி அளிக்கிறது என்று சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி கூறுகின்றனர். அத்துடன் அங்கு வளர்ச்சி இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில மக்களுக்கு பணம் அளிக்கிறோம் என்று கூறியது மாநில மக்களை அவமதிக்கும் செயலாகும். அந்த பணம் என்ன ராகுல் காந்தியின் மாமா வீட்டில் இருந்து வருகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி. யுமான ஜாக்தாம்பிகா பால், நரேந்திர மோடி குஜராத்தின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறார். அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? அவரது தாத்தா வீட்டில் இருந்தா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications