பெரிய சதி.. ஜம்முவில் நுழைந்த 30+ பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. உளவுத்துறை வார்னிங்கால் பனிமலையில் ஆபரேஷன்
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து 30க்கும் அதிகமான பயங்கரவாதிகள் ஜம்முவுக்குள் நுழைந்து அங்கு ஆக்டிவ்வாக செயல்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறை வார்னிங் செய்துள்ளது. அவர்கள் பெரிய சதித்திட்டத்துடன் வந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நம் நாட்டின் ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியாகினர்.

இதையடுத்து நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை பாகிஸ்தானை நம் நாடு பந்தாடியது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. ராணுவ தளம், விமான தளம் நொறுக்கப்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து நம் நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதோடு பல்வேறு ஆபரேஷன்களை நடத்திய பயங்கரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது மத்திய உளவுத்துறை முக்கிய வார்னிங்கை தந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஆங்காங்கே பனி பெய்து வருகிறது. இப்படியான சூழலில் தான் ஜம்முவில் 30க்கும் அதிகமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
தற்போது காஷ்மீரில் ‛சில்லாய் கலான்' எனப்படும் 40 நாள் கடுமையான குளிர்காலம் நிலவி வருகிறது. இந்த குளிர்காலம் டிசம்பர் 21ம் தேதி தொடங்கியது. இது மோசமான வானிலையாகும். கடும் குளிருடன், பனிப்பொழிவும் கடுமையாக இருக்கும். இந்த காலநிலையை பயன்படுத்தி பெரிய சதித்திட்டத்துடன் அவர்கள் ஜம்முவுக்குள் நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நம் நாட்டின் ராணுவத்தினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளவுத்துறையின் வார்னிங் மற்றும் ராணுவத்தினரின் தீவிர தேடுதல் பணி உள்ளிட்டவற்றால் பயங்கரவாதிகள் கிஷ்வார், தோடா போன்ற உயரமான மற்றும் மத்திய மலைப் பகுதிகளுக்கு சென்று பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் பயங்கரவாதிகள் அங்கு சென்று பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் பதுங்குவதாக கணிக்கப்பட்டுள்ள மலைத்தொடர், வனப்பகுதி, பள்ளத்தாக்குகளில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த தேடும் வேட்டையில் ராணுவத்துடன் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் வீரர்கள், எஸ்ஓஜி எனும் சிறப்பு நடவடிக்கை குழுவினர் வனக்காவலர்கள், கிராம மக்கள் இணைந்துள்ளனர். தங்களின் ஏரியாக்களில் சந்தேகப்படும் படியாக யாராவது நடமாடினால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ராணுவம், காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தெர்மல் இமேஜர், கிரவுண்ட் சென்சார் உள்ளிட்டவையும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications