'சிறையிலிருந்தபடி மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?'.. மே.வங்கம் அதிரடி கேள்வி
கொல்கத்தா: மேற்கு வங்க அரசுப் பணிகளுக்கான தேர்வில் "சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு சாவர்க்கர் உள்ளிட்ட நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகினற்னர். ஆனால் பாஜகவோ யு.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வாணைய தேர்வுகளில் தங்கள் சித்தாந்தத்துக்கு ஆதரவான வினாக்களை கேட்டு வருகிறது.
அண்மையில் , யு.பி.எஸ்.சி தேர்வாணையம் நடத்திய மத்திய ஆயுதப்படை துணை ராணுவப் படை (CAPF) பணிகளுக்கான தேர்வில், பா.ஜ.கவின் குரலை எதிரொலிக்கும் வகையிலான கேள்விகள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி ஆகியவை விமர்சனங்கள் ஏற்படுத்தியது.

மம்தா பானர்ஜி
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானார்ஜி தலைமையிலனா திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசுக்கும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது,

பாஜகவிற்கு பதிலடி
யுபிஎஸ்சி தேர்வில் கேள்விகள் உருவாக்கிய பா.ஜ.க அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, அம்மாநில குடிமைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கர் குறித்து கேள்வியை கேட்டுள்ளது.

மன்னிப்பு கடிதம்
அதாவது, "சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு சாவர்க்கர், திலக், சந்திசேகர் ஆசாத், சுக்தேவ் தபார் உள்ளிட்ட நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வரலாற்று நிகழ்வு
இதற்கு விடை சாவர்க்கர். சாவர்க்கரை பற்றி கேட்கப்பட்டிருந்த இந்த கேள்விக்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ, இதில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை . வரலாற்றில் நடந்த நிகழ்வே கேள்வியாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

என்ன கடிதம்
பா.ஜ.கவினரால் 'வீர சாவர்க்கர்' என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் 1911ஆம் ஆண்டு முதல் பல முறை ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியிருந்தார். சாவர்க்கர் ஒரு கடிதத்தில் "ஆங்கில அரசு விரும்பும் எதையும் செய்ய நான் தயார். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கு செல்வேன்" என சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.












Click it and Unblock the Notifications