அப்சல் குருவுக்கு தூக்கு.. இன்று ஓராண்டு.. பாதுகாப்பு வளையத்தில் காஷ்மீர்

Subscribe to Oneindia Tamil

Afzal Guru first death remembrance observed in Kashmir
ஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீ்ரில் பல இடங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் அப்சல் குரு. அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அவர் தூக்கிலிடப்பட்டார்.

இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டம் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் காஷ்மீரில் செல்போன், இணையதள சேவைகளும் இன்று முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+