நான் ரெடி.. நீங்க ரெடியா... இத்தாலி ஹெலிகாப்டர் பேரத்தின் இடைத்தரகர் சிபிஜக்கு கடிதம்
டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கல் இந்திய போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேச தயாராக உள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் 2013ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்தப் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களிடம் 10 சதவீத கமிஷன் என்ற அளவில் சுமார் 370 கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, இந்த ஊழல் தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்டின் தாய் நிறுவனமான பின்மெக்கானிக்காவின் தலைவர் குயூஸ்பே ஓர்சி, முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி புரூனோ பக்னோலினி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கலிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், பிரிட்டனில் உள்ள கிறிஸ்டியன் மைக்கலை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், இந்திய விசாரணை அதிகாரிகளை சந்திக்க தயாராக இருப்பதாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கல் சிபிஐக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆகஸ்டு 25 என்று தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் இந்திய விசாரணை அதிகாரிகளை துபாயில் சந்திக்க தயாராக இருப்பதாகவும், விசாரணை நடைபெற்றால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட் கார்னர் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தான் குற்றமற்றவர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்தில் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கலுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டை இந்திய நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியா வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் கிறிஸ்டியன் மைக்கலுக்கு இருப்பதால் விசாரணையை துபாய்யில் வைத்துக் கொள்ள கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications