குஜராத்தில் பாஜக, காங். இடையே கடும் போட்டி... சமநிலையில் முன்னிலை!
குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவிடையே கடுமையான போட்டி நிலவுவதாக அகமதாபாத் மிரர் தகவல் தெரிவிக்கிறது.
Recommended Video
அகமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தலில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜக காங்கிரஸ் கட்சியிடையே கடுமையான போட்டி நிலவுவதாக அகமதாபாத் மிரர் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் வளர்ச்சிக்கும், குடும்ப அரசியலுக்கும் இடையேயான போட்டியாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இடையேயான போட்டியாக பார்க்கப்படுகிறது சட்டசபை தேர்தலில். இரண்டு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் முடிவுகளை எண்ணும் பணி காலை முதல் தொடங்கியுள்ளது.
தபாக் வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்து வருகின்றன. இதே போன்று சில ஊடங்கள் பாஜக அதிக வித்தியாசத்தில் காங்கிரஸை விட முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து வெளிவரும் அகமதாபாத் மிரர் இணையதள செய்தி நிறுவனம் காலை 8.20 மணி நிலவரப்படி பாஜக 24 டங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறியுள்ளது.