அகமதாபாத்தில் வீதி வீதியாக பிரசாரம்... பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
அகமதாபாத்தில் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அகமதாபாத்தில் வீதி வீதியாக பிரசராம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. 2-வது கட்ட வாக்குப் பதிவு வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்கிறது. 2-வது கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது.
அகமதாபாத்தில் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஆனால் இருவரும் வீதி வீதியாக பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் ஒரே நேரத்தில் வீதிகளில் பிரசாரம் செய்வதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்பதால் அகமதாபாத் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.