ஓவர் வெயிட்... 125 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஏர் இந்தியா திட்டம்
டெல்லி: உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி விமானப் பணிப்பெண்கள் உட்பட 125 ஊழியர்களை பணியிலிருந்து விலக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிமுறைகளின்படி, பணிப்பெண்கள் உட்பட விமானக் குழுவினர் அனைவரும் தங்கள் உடல் எடையை குறிப்பிட்ட அளவில் பராமரிக்க வேண்டும்.

ஆனால், கடந்த ஆண்டு இந்த விதிமுறைகளின் படி உடல் எடையை சுமார் 600 ஊழியர்கள் பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே அவர்களை எச்சரித்தது ஏர் இந்தியா. கடைசியாக உடல் எடையைக் குறைக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல், இத்தனை மாதங்கள் கடந்த பின்னும் உடல் எடையை பராமரிக்காமல் பணிப்பெண்கள் உட்பட 125 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்களைப் பணியில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களில் சிலருக்கு விமான நிலையத்தில் இருந்தபடி செய்யும் வேலைகள் கொடுக்க இருப்பதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications