பெங்களூரு தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தை இழந்த அதிமுக வேட்பாளர்கள்... ’மிக்சி’யில் போட்டி
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், அவர்கள் சுயேட்சையாகவே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி தேர்தல், வரும், 22ம் தேதி நடை பெற இருக்கிறது. பெங்களூரு மாநகரின் சில பகுதிகளில், தமிழர்கள் அதிகமாக வசிப்பதால் அங்கு அதிமுக போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் விரும்பினர். இதற்கு கட்சித் தலைமையும் அனுமதி கொடுத்தது.

எனவே, அதிமுக சார்பில் ஏழு வார்டுகளில் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். வேட்புமனு தாக்கல் துவங்குவதற்கு முன், சின்னம் ஒதுக்கீட்டுக்கான அனுமதி கடிதத்தை இந்த வேட்பாளர்கள் பெறவில்லை. இதனால், இந்தத் தேர்தலில் இந்த ஏழு வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது.
இது தொடர்பாக கர்நாடக அதிமுக வினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கர்நாடகாவில் அதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க முடியாது' என மறுப்புத் தெரிவித்தார்.
இதன் காரணமாக, பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் இந்த வேட்பாளர்களுக்கு மிக்சி சின்னமே கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications