"நாடாளுமன்றத்தை அப்படியே அலேக்கா தூக்கி..." - எம்.பி.நவநீதகிருஷ்ணன் அடடே ஐடியா
நாடாளுமன்ற கூட்டங்களை தென் இந்தியாவில் நடத்த வேண்டும் என அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருவதால் தலைநகரில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்ற, பரிசீலனை செய்யும்படி அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
"காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்......" என்று பாடியும், சொல்ல வந்த விஷயத்தை விட "அம்மா ஜெயலலிதா" என்ற வார்த்தையை அதிகமாக பேசியும் நாடாளுமன்றத்தில் பிரபலமானவர் எம்.பி.நவநீதகிருஷ்ணன். மாநிலங்களவையில் நேற்றைய கூட்டத்தில் "டெல்லி காற்று மாசு" குறித்த விவாதம் நடைபெற்றது.

தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்ட, சர்ச்சையில்லாத தலைப்பு என்பதால் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் இந்த விவாதத்தில் கலந்துக்கொண்ட அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன், டெல்லி விரைவில் மக்கள் வாழ முடியாத நகரமாக மாறி விடும் என தெரிவித்தார்.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணமுடியாது என்பதால் கூட்டத்தொடர்களை தென் இந்தியாவிற்கு மாற்ற வேண்டும். கூட்டத்தொடர்களை அங்கு மாற்றுவதன் மூலம் வடமாநில எம்.பி. நண்பர்கள் இயற்கை எழில் கொஞ்சும் சுகாதாரமான நகர சூழ்நிலைகளை அனுபவிக்கலாம் என்றார்.
கூட்டத்தொடர்களை நாக்பூர், பெங்களூரு அல்லது சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தலாம் என்றும், இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாக இருக்கும் என்றும் நவநீதகிருஷ்ணன் யோசனை தெரிவித்தார்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அங்கே பார்க்க வந்த எம்.பிகளுக்கு மத்தியில் தமிழக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன் என்று வந்து நின்ற நவநீதகிருஷ்ணனை, செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அப்போதிலிருந்து செய்தியாளர்களை தவிர்க்கும் அவர், தற்போது நாடாளுமன்றத்தில் கூறிய இந்த யோசனையின் மூலமாக மீண்டும் தமிழக செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications