விமானத்தில் பறக்க மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ! டிக்கெட்டில் டிஸ்கவுண்ட் தரும் ஏர் இந்தியா !!
டெல்லி: ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாணவர்களுக்கு உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகையை இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் வேறு பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்காகவோ, நுழைவுத் தேர்வுகளுக்காகவோ பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மாணவர்கள் நலன் கருதி உள்நாட்டு பயணக் கட்டணத்தில் சலுகை வழங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண தள்ளுபடி திட்டத்தின்கீழ் உள்நாட்டில் 1000 கி.மீ. தொலைவுக்குள் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களிடம் 3500 ரூபாய் மட்டுமே கட்டணமாக (வரிகள் சேர்த்து) வசூலிக்கப்படும். 1000 கி.மீ. தொலைவுக்கு அதிகமாக பயணம் செய்வோருக்கு 5500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம்தேதி வரையிலான பயணங்களுக்கு இந்த தள்ளுபடி சலுகைக்கான டிக்கெட்டுகளை பெறலாம் என்றும், நேற்று முதல் ஜூலை 31-ம் தேதி வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications