Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய்ப்பூர்: ஏர் இந்தியா விமானத்தில் தீ: 170 பயணிகள் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

இம்பால்: ஜெய்ப்பூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் இறக்கையில் திடீரென்று தீ பற்றியதால் பயணிகள் அச்சமடைந்தனர். எந்த வித ஆபத்தும் இன்றி விமானம் தரையிறங்கியதால் அதில் பயணம் செய்த பயணிகள் உயிர் பிழைத்தனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து ஞாயிறன்று டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம், 170 பயணிகளுடன் கிளம்பியது. இம்பாலிலிருந்து சுமுகமாக பயணம் செய்து 4 மணி நேரத்தில் டெல்லி வந்தடைந்தது. ஆனால், தரையிரங்க வேண்டிய நேரத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக விமானத்தை ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யுமாறு டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் விமானிக்கு உத்தரவிட்டனர்.

Air India

இதையடுத்து அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. அப்போது விமானம் தரையிறங்கப் போவதாகவும், பயணிகள் அனைவரும் சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுமாறும் பணிப்பெண்கள் உத்தரவிட்டனர். ஆனால், விமானம் தறையிறங்கிய சமயத்தில் விமானத்தின் டயரில் தீப்பிடித்தது. விமானத்தின் ஒரு பக்க சிறகும் சேதமடைந்தது.

கிட்டத்தட்ட விமானம் இரண்டாக பிளப்பது போல் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கடும் நடுக்கம் அடைந்து தாங்கள் மரணத்தின் விளிம்பில் நின்றிருப்பதாக கருதிய நிலையில், விமானம் அமைதியாக ஓடுபாதையில் நின்றது.

கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தாக விமானி பயணிகளிடம் தெரிவித்தபோது, பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் நீண்ட நேரம் கழித்தே அதிர்ச்சியிலிருந்து மீண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+