டெல்லி- சான்பிரான்சிஸ்கோ இடையே டிச. 2 முதல் நான் ஸ்டாப் ஏர் இந்தியா விமானம்
டெல்லி: பிரதமர் மோடி சிலிக்கான் வேலிக்குச் சென்றதைக் கெளரவிக்கும் வகையில் டிசம்பர் 2ம் தேதி முதல் டெல்லி - சான்பிரான்சிஸ்கோ இடையிலான நேரடி இடை நில்லா விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமான சேவை சிலிக்கான் வேலியில் பணியாற்றி வரும் இந்திய ஐடி துறையினரின் நீண்ட காலக் கோரிக்கையாகும். தற்போது மோடி பயணத்தையொட்டி அதை நனவாக்கியுள்ளது ஏர் இந்தியா.

இதுதொடர்பான அறிவிப்பை இன்று சாப் மையத்தில் நடந்த பேச்சின் இறுதியில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த விமானமானது டெல்லியிலிருந்து கிளம்பி சான்பிரான்சிஸ்கோவில்தான் போய் நிற்கும். இடையில் எங்கும் நிற்காது.
மேலும் தொடர்ச்சியாக 14 மணி நேரம் இது பறக்கவிருப்பதால் உலகிலேயே நீண்ட நேரம் தொடர்ந்து பறக்கும் முதல் விமான சேவை என்ற பெயரும் இந்த சேவைக்குக் கிடைக்கவுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை நியூயார்க், நெவார்க், சிகாகோ ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா தனது சேவையை இயக்கி வருகிறது. தற்போது சான்பிரான்சிஸ்கோவும் இதில் இணைகிறது.
டிசம்பர் 2ம் தேதி முதல் புதன்கிழமை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவை இயக்கப்படும்.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications