நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு.. டெல்லி பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்கள் லீவு
டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் பொதுக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளிக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் அதிக மாசு காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் மூச்சுவிட முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் காற்று மாசு நேற்று அதிகரித்து காணப்பட்டது. காற்று மாசுக்குறியீட்டு அளவு 428ல் இருந்து 825 ஆக இருந்தது. இது மிகவும் கடுமையான நிலை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த காற்று மாசு அடுத்த 3 நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் மேலும் 3 நாட்களுக்கு விடுமுறையை நீட்டித்துள்ளது அம்மாநில அரசு. டெல்லியில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும், கட்டடங்களை இடிக்கவும் 5 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
பதன்பூர் அனல்மின்நிலையத்திலும் 10 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று பொதுப்பணித்துறையினர் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று குப்பைக் கிடங்குகளில் எரியும் தீ அணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications