நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு.. டெல்லி பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்கள் லீவு
டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் பொதுக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளிக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் அதிக மாசு காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் மூச்சுவிட முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் காற்று மாசு நேற்று அதிகரித்து காணப்பட்டது. காற்று மாசுக்குறியீட்டு அளவு 428ல் இருந்து 825 ஆக இருந்தது. இது மிகவும் கடுமையான நிலை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த காற்று மாசு அடுத்த 3 நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் மேலும் 3 நாட்களுக்கு விடுமுறையை நீட்டித்துள்ளது அம்மாநில அரசு. டெல்லியில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும், கட்டடங்களை இடிக்கவும் 5 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
பதன்பூர் அனல்மின்நிலையத்திலும் 10 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று பொதுப்பணித்துறையினர் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று குப்பைக் கிடங்குகளில் எரியும் தீ அணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications