ஆர்.எஸ்.எஸ். தலைவரை தொடர்புபடுத்த நெருக்கடி தந்தார் ஷிண்டே?அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு!

2007ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு ஹிந்து இயக்கத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஹிந்து இயக்கத்தைச் சேர்ந்த அசீமானந்தா, பவேஸ் படேல், தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஹிந்து இயக்கத் தலைவர்களை தொடர்புபடுத்தி வாக்குமூலம் தருமாறு காங்கிரஸின் திக்விஜய் சிங், மத்திய அமைச்சர்கள் ஆர்.பி.என்.சிங், ஸ்ரீபிகராஷ் ஜெய்ஸ்வால் ஆகியோர் நெருக்கடி கொடுத்தனர் என்று பவேஸ் படேல் முன்பு கூறியிருந்தார்.
தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மூத்த தலைவர் இந்த்ரேஸ் குமாரையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தி வாக்குமூலம் தருமாறு உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தமக்கு நெருக்கடி கொடுத்ததாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றத்துக்கு பவேஸ் படேல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. நிராகரித்துள்ளது. எந்த ஒரு நபரிடமும் நெருக்கடி கொடுத்து வாக்குமூலம் வாங்கவில்லை என்றும் அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் ராம் மாதவோ, ஹிந்து இயக்கங்கள் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கில் தொடக்கம் முதலே செயல்பட்டு வருகின்றனர். எந்த ஒரு பாரபட்சமற்ற விசாரணையே எங்களுக்குத் தேவை என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications