அப்பாவுக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த மகன்.. உ.பி. அரசியலில் வலுக்கும் குடும்பச் சண்டை
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்குப் போட்டியாக அவரது மகன் அகிலேஷ் யாதவும் ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனால் அக்கட
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்குப் போட்டியாக அவரது மகன் அகிலேஷ் யாதவும் ஒரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனால் அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல் வலுத்துள்ளது.
உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சியில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவ்பால் சிங்கும் இடையேயான கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 325 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மாநில முதல்வரும், முலாயமின் மகனுமான அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அகிலேஷால் தீவிரமாக எதிர்க்கப்பட்ட சிலர், வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டனர். முக்கியமாக அண்மையில் கட்சியில் இணைந்த குவாமி ஏக்தா தளத்தின் எம்எல்ஏ சிக்பாதுல்லா அன்சாரிக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது அகிலேஷ் கூறியிருந்தார்.

அகிலேஷால் எதிர்க்கப்பட்டவருக்கு வாய்ப்பு
அவரது சகோதரர்கள் கொலைப் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருப்பதால், தேர்தலில் சமாஜவாதி கட்சிக்கு அது பின்னடைவைத் தரும் என அகிலேஷ் கூறினார். ஆனால், அதையும் மீறி முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட பட்டியலில் அன்சாரியின் பெயர் இடம் பெற்றது.

அகிலேஷ் ஆதரவாளர்களுக்கு அல்வா
அதேவேளையில், அகிலேஷ் ஆதரவு அமைச்சர்களான ராம் கோவிந்த் செளத்ரி, பவன் பாண்டே, அரவிந்த் சிங் கோப் ஆகியோரின் பெயர்கள் முலாயம் சிங்கின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அகிலேஷ், வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்து உடனடியாக லக்னோவுக்கு திரும்பி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தனிப்பட்டியல் வெளியிட்ட அகிலேஷ்
இதையடுத்து புதிய வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் தனியாக வெளியிட்டுள்ளார். இதில் 235 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முலாயம் சிங் வெளிட்ட பட்டியலில் இடம்பெறாத தற்போதைய எம்எல்ஏ-க்கள் பலரது பெயர்கள் அகிலேஷ் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

குடும்பச்சண்டையால் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கட்சி தலைமைகளுக்கு இடையே வலுத்து வரும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications