வறுமையால் டெல்லி கோயில்களில் தஞ்சம் அடைந்த பாலிவுட் நடிகை!!
டெல்லி: பாலிவுட் நடிகை அலிசா கான் வறுமை காரணமாக இன்று வசிக்க வீடு கூட இல்லாமல் டெல்லியில் உள்ள கோயில்களில் தஞ்சம் அடைந்துள்ளார்.
காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் அலிசா கான். இவர் ''மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்'' என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் இம்ரான் ஹஷ்மியுடன் நடித்துள்ள படம் இன்னும் வெளியாகவில்லை.
மும்பை பட உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அலிசா, தற்போது டெல்லியின் தெருக்களுக்கு வறுமையால் தள்ளப்பட்டுள்ளார். குடும்பத்தினரும் இவரை புறக்கணித்து விட்டனர்.
இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று போர்ன் சைட்களில் வெளியானது. இதனையடுத்து வீட்டில் இருந்து இவரது குடும்பத்தினர் அலிசாவை வெளியேற்றினர். அந்த ஆண் நண்பர் பல நாட்கள் இவரை மிரட்டியும் வந்துள்ளார்.
இதுகுறித்து அலிசா மும்பை போலீசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த வீடியோ வெளியான பின்னர்தான் வீட்டில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
டெல்லியில் வறுமையால் வாடி வரும் அலிசா, கோயில்களில் அல்லது அவரது நண்பர்கள் வீட்டில் அவ்வப்போது தங்கி வருகிறார். இவர் ஹஸ்மியுடன் நடித்த ஆயினா என்ற சினிமா இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மாடல் கீதாஞ்சலி நாக்பால் டெல்லியின் தெருக்களில் வசித்து வந்தார். இவரது வாழ்க்கைதான் ''மதுர் பந்தர்கர்'' என்ற திரைப்படமாக வெளிவந்தது. இந்தப் படத்தில் மாடல் கீதாஞ்சலி வேடத்தில் நடித்து இருந்த கங்கானா ரனாவுத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.