டூரை கேன்சல் செய்து விட்டு டெல்லியிலேயே இருக்க வேண்டும்- செயலாளர்களுக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் வருகிற திங்கள்கிழமை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதால், அனைத்துத் துறைச் செயலாளர்களும் தங்களது விடுமுறை, சுற்றுப்பயணங்களை ரத்து செய்து விட்டு டெல்லியிலேயே இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவு மத்திய அமைச்சரவை செயலகத்திலிருந்து போயுள்ளது. மேலும் அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளும் தங்களது சுற்றுப்பயணங்களை ரத்து செய்து விடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவைச் செயலாளர் அஜீத் சேத்தும் முக்கியமான அமைச்சகங்களின் துறைச் செயலாளர்களை அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய மத்திய அரசு எதிர்கொள்ளவுள்ள இலக்குகள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், 6க்கும் மேற்பட்ட துறைகளின் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications