தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு ஆதரவு: அருண் ஜெட்லி
கொல்கத்தா: தமிழ்நாட்டை தவிர அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான வரைவு சட்டம் குறித்து விவாதிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு தமிழகத்தை தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மசோதா குறித்து தமிழக அரசு சில கருத்துக்களை வழங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. மற்ற மாநிலமும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார். இந்த மசோதாவின் கீழ் விதிக்கப்படும் ஒரு சதவீத கூடுதல் வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு சரி செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து மாநில நிதியமைச்சர்கள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 22 மாநில நிதியமைச்சர்கள் ஜி.எஸ்.டி. மசோதா குறித்த தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் சரக்கு சேவை வரி மசோதா எளிதில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறாமல் உள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான சரக்கு சேவை வரி விதிக்கப்படும்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications