தீவிரவாதிகள் அனைவரும் ஒரே சமூகத்தினராக இருக்கிறார்களே? கிரிராஜ்சிங்கின் மற்றொரு சர்ச்சை பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீவிரவாதிகள் என கைது செய்யப்படுகிறவர்கள் அனைவரும் ஒரே ஒரு சமூகத்தினராகவே இருக்கிறார்களே என்று பேசி மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை பிரதமராக ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போகலாம் என்று கூறியிருந்தார் பீகார் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான கிரிராஜ்சிங். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

All terrorists belong to 'particular community', says Giriraj Singh

கிரிராஜ்சிங்கின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் அவர் மீது வழக்குகளும் பதியப்பட்டன.

தற்போது பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த மற்றொரு கருத்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. "பயங்கரவாதம் என்பது ஒரு சமூகம் அல்லது ஒரு நாட்டுக்கே மட்டுமே உரியது அல்லதான். ஆனால் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே தீவிரவாதிகள் என கைது செய்யப்படுகின்றனர். இது பற்றியெல்லாம் மதச்சார்பற்ற தலைவர்கள் வாயே திறப்பதில்லை?

ஒரு சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்லவில்லை.. ஆனால் பிடிபடுகிறவர்கள் அனைவரும் ஒரு சமூகத்தினராக இருக்கிறார்களே..": இதுதான் கிரிராஜ்சிங்கின் புதிய சர்ச்சை கருத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+