ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்கும் முடிவு காங்கிரஸின் தலைமை எடுத்தது.. சித்தராமையா பேட்டி
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்ததாக சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.
பெங்களூர்: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்ததாக சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

தற்போது கர்நாடக அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 76 ; ஜேடிஎஸ் 41 இடங்களில் வென்றுள்ளது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபை அமைத்துள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும் படி, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அவர் ஆளுநரிடம் பேட்டி அளித்துள்ளார். இதன் பின் குமாராசாமியும், சித்தராமையும் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அதில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க ஆதரவளிக்கும் முடிவை டெல்லி தலைமை எடுத்தது. காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினை ஆட்சியில் அமர்த்தலாம் துன்று மேலிடம்தான் முடிவு செய்தது. இதுவரை ஆட்சி அமைப்பதற்கு எந்த விதமான நிபந்தையும் விதிக்கப்படவில்லை.
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது. எண்களின் கோரிக்கையை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் விரைவில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆளுநர் பாஜக கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். ஆளுநர் பாஜகவிற்கு ஆதரவாக இந்த முடிவை எடுத்துள்ளார். ஆளுநர் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications