இந்திய அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை வலியுறுத்தினார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி போப்டே
நாக்பூர்: இந்தியாவின் அதிகாரப்பூர்வமான அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே சுட்டிக்காட்டியுள்ளார்.
நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி போப்டே பேசியதாவது:
நான் மராத்தி மொழியில் அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும்? என யோசித்து கொண்டிருந்தேன். இந்த ஊசலாட்டம் இந்த தேசத்தில் பன்னெடுங்காலமாகவே இருந்தும் வருகிறதுதான்.

எது அலுவல் மொழி?
நமது நாட்டின் நீதிமன்றங்களில் எந்த மொழி அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்கள், கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. நமது நாட்டின் உயர்நீதிமன்றங்கள், ஆங்கிலத்தையும் இந்தியையும் அலுவல் மொழிகளாகக் கொண்டிருக்கின்றன. சிலர் தமிழையும் சிலர் தெலுங்கையும் அலுவல் மொழிகளாக்க விரும்புகின்றனர்.

அம்பேத்கர்- சமஸ்கிருதம்
ஆனால் அண்ணல் அம்பேத்கரோ, இந்தியாவில் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தினார். அம்பேத்கரைப் பொறுத்தவரையில் வட இந்தியாவில் தமிழ் மொழியை ஏற்கமாட்டார்கள்; தென்னிந்தியாவில் இந்தி மொழியை ஏற்கமாட்டார்கள். ஆனால் சமஸ்கிருத மொழிக்கு வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் எதிர்ப்பு இருக்காது என கருதினார் அம்பேத்கர்.

நிறைவேறாத அம்பேத்கர் விருப்பம்
அதனால்தான் அம்பேத்கர் இந்த கருத்தை முன்வைத்தார். ஆனால் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறாமல் போனது. சட்டத்தில் மட்டுமல்ல சமூகம், அரசியல் துறைகளிலும் அம்பேத்கர் வல்லுநராக திகழ்ந்தவர். மக்களுக்கு என்ன தேவை, ஏழைகளுக்கு என்ன என்பதை அறிந்தவராக இருந்தார்.

அலுவல் மொழியாக ஆங்கிலம்
ஆனால் கடைசியில் இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் கொண்டுவரப்பட்டது. அதனால் நானும் ஆங்கிலத்தில் இங்கே பேசுகிறேன். இவ்வாறு இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா, உச்சநீதிமன்ற நீதிபதி பூஷண் கவாய் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications