பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவுக்கு மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகம் இரங்கல்
பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மரணம் வருத்தத்தை அளிப்பதாக மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மும்பை : பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மரணம் மிகுந்த வருத்ததை ஏற்படுத்தி இருப்பதாக மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதகரம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களிலும், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளும் நடித்தவர் ஸ்ரீதேவி.
அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டின் பெண் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் பெற்றவர்.
இந்தி திரைப்பட இயக்குநர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறிய ஸ்ரீதேவிக்கு, ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், துபாயில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஸ்ரீதேவியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நாட்டின் பல்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதகரம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், தனது நடிப்புத் திறமையால் உலக மக்களின் மனதைத் தொட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்திற்கும், ரசிகர்களும் இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.