For Daily Alerts
Just In
ரிசல்ட் அன்று எப்படி பேசுவது? காங். செய்தி தொடர்பாளருக்கு நாளை ராகுலின் ஸ்பெஷல் க்ளாஸ்
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில் நாளை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இப்போதே காங்கிரஸ் கட்சியினர் ராகுல், பிரதமர் மன்மோகன்சிங்கை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று கூறி வருகிறது.
இருப்பினும் காங்கிரஸ் தரப்பில் ஒருமித்த கருத்தையே வெளிப்படுத்த வேண்டும் என்பது அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் திட்டம். இதற்காகவே அனைத்து செய்தித் தொடர்பாளர்களையும் அழைத்திருக்கிறார் ராகுல்.
நாளைய இக்கூட்டத்தில் ஊடகங்களில் என்ன மாதிரியான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்று சிறப்பு வகுப்பு எடுக்க இருக்கிறராம் ராகுல் காந்தி.
Comments
English summary
Rahul Gandhi will meet all his party's spokespersons tomorrow as the Congress preps for Friday's counting of votes in the general elections.
Story first published: Wednesday, May 14, 2014, 16:22 [IST]