Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொராபுதீன் ஷேக்கை என்கவுண்டர் செய்ய அமித்ஷாவிற்கு ரூ.60 லட்சம் லஞ்சம்.. சிபிஐ அதிகாரி திடுக்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சொராபுதீன் என்கவுண்டரில் அமித்ஷாவுக்கு லஞ்சம்?- வீடியோ

    காந்திநகர்: குஜராத் போலீசாரால் கடந்த 2005ம் ஆண்டு சொரபுதீன் ஷேக் எண்கவுன்ட்டர் செய்யப்பட்டதில், பாஜக தலைவர் அமித் ஷா, பண ரீதியாக ஆதாயம் அடைந்தார் என்று சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை அதிகாரி தெரிவித்துள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குஜராத் மாநில அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமித் ஷா. அப்போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக் என்பவருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அரசியல் தலைவர்களை கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்றும் குற்றம்சாட்டி, குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் 2005ல், கைது செய்தனர். அதே ஆண்டு, நவம்பர் 26ம் தேதி, சொராபுதீன் ஷேக்கை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுகொலை செய்தனர். இந்த பரபரப்பு ஓயும் முன்பாக, சொராபுதீன் ஷேக் மனைவி கவுசர்பியையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    Amit Shah among main conspirators in Sohrabuddin fake encounters: Chief investigating officer

    இதன்பிறகு, கடந்த 2006ம் ஆண்டு, சொராபுதீன் ஷேக் உதவியாளர் துளசி பிரஜாபதி குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீசாருடன், இணைந்து டிசம்பர் மாதம் சுட்டுக்கொன்றனர். இந்த 3 கொலைகளும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தின. இவை போலி என்கவுண்டர்கள் என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

    3 கொலைகளிலும், குஜராத் மாநில அரசின் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக, அப்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அமித்ஷா 2010ல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    என்கவுண்டர் வழக்கை விசாரணை செய்த தலைமை விசாரணை அதிகாரியான அமிதாப் தாக்கூர், நீதிமன்றத்தில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில், அமித் ஷா, அரசியல் ரீதியாக மட்டுமின்றி, பண ரீதியாகவும், ஆதாயம் அடைந்தார். அகமதாபாத்தை சேர்ந்த பட்டேல் சகோதரர்கள் அமித் ஷாவுக்கு ரூ.70 லட்சம் கொடுத்து இந்த என்கவுண்டர் செய்யப்பட்டது. தீவிரவாத தடுப்புப்பரிவு டிஐஜி வன்சாராவுக்கும் ரூ.60 லட்சத்தை பட்டேல் சகோதரர்கள் கொடுத்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+