சென்னையில் அமித் ஷா.. லோக்சபா தேர்தல் குறித்து இன்று விஜிபி கோல்டன் பீச்சில் பாஜகவினருடன் ஆலோசனை
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்.
Recommended Video

சென்னை: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்துள்ளார். இதற்காக சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பாஜக கட்சி இப்போதே தயாராகிவிட்டது என்று கூட கூறலாம். அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, இந்த தேர்தலுக்காக, கட்சி நிர்வாகிகளை எல்லா மாநிலங்களுக்கும் சென்று சந்தித்து வருகிறார்.

தேர்தல் திட்ட பணிகள் குறித்து அவர் இந்த சந்திப்பில் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தமிழகம் வந்துள்ளார். இதற்காக பாஜக கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.
அமித் ஷா தற்போது சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பாஜக தலைவரின் வருகை கட்சியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.இதனால் தற்போது சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
லோக் சபா தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. இசிஆரில் உள்ள தனியார் அரங்கில் ஆலோசனை நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications