வெளியான 43 வீடியோக்கள்.. பூமராங் போல திரும்பிய கொல்கத்தா கலவரம்.. பாஜக ஷாக்!
கொல்கத்தாவில் நேற்று நடந்த கலவரத்தில் பாஜகவிற்கு எதிராக நிறைய ஆதாரங்கள் வெளியாகி வருவதால், அக்கட்சி அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது.
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடந்த கலவரத்தில் பாஜகவிற்கு எதிராக நிறைய ஆதாரங்கள் வெளியாகி வருவதால், அக்கட்சி அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார். நேற்று கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்த பேரணி செல்லும் போது பெரிய கலவரம் ஏற்பட்டது. அங்கு இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இடையே பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது.

அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் அந்த வித்யாசாகர் கல்லூரிக்குள் சென்று அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். நேற்று இரவு முழுக்க இந்த கலவரம் அங்கு நடந்தது. இந்த கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக குற்றஞ்சாட்டியது.
#Video #3 Here's more evidence of the vandalism by goons of #BJP at Amit Shah road show #Kolkata #Vidyasagar pic.twitter.com/Ombl7cKqev
— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) May 15, 2019
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் மூன்று புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதை வைத்து கொல்கத்தாவில் கடைசி கட்ட தேர்தலின் போது வாக்கு கேட்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் பாஜகவின் கனவை மமதா பானர்ஜி கலைத்து இருக்கிறார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த கலவரத்தில் பாஜகவிற்கு எதிராக நிறைய ஆதாரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது. மொத்தம் 43 வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பொருட்களை உடைப்பது, கட்டிடங்களை தாக்குவது, கல்லூரியை தாக்குவது எல்லாமே பதிவாகி உள்ளது.
#Video #2 more evidence of what BJP goons did at Amit Shah’s road show in #Kolkata #Vidyasagar pic.twitter.com/8dg13fLVKS
— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) May 15, 2019
அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிக்கொண்டே, தங்களது சொந்த பைக்கையே கொளுத்துவதும் பதிவாகி உள்ளது. இந்த பைக்குகளைதான் காங்கிரஸ் கட்சியினர் கொளுத்திவிட்டனர் என்று பாஜக குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கு எதிராகவே ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.
அதோடு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஈஸ்வர் சந்திரா வித்யாசகரின் சிலையை அடித்து உடைத்தனர். ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் மேற்கு வங்கத்தில் மிக மிக முக்கியமான தலைவர். தமிழகத்தில் பெரியாருக்கு இணையாக பார்க்கப்படும் மறுமலர்ச்சி தலைவர் ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர்.
#Video #1 Evidence of what BJP goons did at Amit Shah’s road show in #Kolkata #Vidyasagar pic.twitter.com/TrQnF8KYdH
— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) May 15, 2019
இதனால் திரிணாமுல் அவரை மையமாக வைத்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளது. கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை திரிணாமுல் அதை வைத்தே செய்யும் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் போக இன்று மாலை மமதா இதை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறார்.
Ishwar Chandra Vidyasagar is no less than Swami Vivekananda for us
— Sid (@sidmtweets) May 14, 2019
I appeal to every Bengali ,punish BJP on polling day for doing this
A murder accused like @AmitShah has no respect for our culture he only wants power at the cost of breaking down our culture pic.twitter.com/ySjtQlsvG3
இந்த பிரச்சனை காரணமாக காலையில் பாஜக சார்பாக நடக்க இருந்த அனைத்து தேர்தல் பிரச்சாரமும் மேற்கு வங்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக திரிணாமுல் மீது பழி வரும் என்று நினைத்த நிலையில் பூமராங் போல மொத்த பழியும் பாஜக மேல் வந்து விழுந்துள்ளது.. இதைத்தான் 90ஸ் கிட்ஸ் முன்பெல்லாம் சனியனை தூக்கி பனியனுக்குள் விட்டுக்கொள்வது என்று சொல்வார்கள். தற்போது பாஜகவும் அதை போலவே பிரச்சனையை தேடிப்போய் வாங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications