பெங்களூரிலும் அம்மா உணவகம் திறப்பு: முதல் நாள் இட்லி 'ஃப்ரீ ஃப்ரீ'
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பெங்களூரில் ரூ.1க்கு இட்லி விற்கும் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் அம்மா உணவகங்களை திறந்து வைத்துள்ளார். அம்மா உணவகங்களில் ரூ.1க்கு 1 இட்லி திட்டம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.
மேலும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகளின் விலையும் மிக, மிகக் குறைவாகும்.

பெங்களூரில்
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பெங்களூரில் உள்ள கலசிபாலயா காவல் நிலையத்திற்கு எதிரே அம்மா உணவகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ஞாயிறு மட்டுமே
புதிதாக துவங்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இட்லி, சாம்பார் வழங்கப்படும். இதை தினமும் வழங்க சில வாரங்கள் ஆகும் என்று பெங்களூரைச் சேர்ந்த அதிமுக தலைவர் கே.ஆர்.கிருஷ்ணராஜு தெரிவித்தார்.

ராஜு
கடந்த 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் உண்மையான தொண்டராக இருக்கும் ராஜு அவரின் ஒவ்வொரு பிறந்தநாளையொட்டியும் ஏதாவது ஒரு காரியம் செய்வார். இந்த ஆண்டு அம்மா உணவகத்தை துவங்கியுள்ளார்.

கர்நாடக அரசு பணம் குடுக்கணுமாம்..
அம்மா உணவகத்தை ஒரு ஆண்டு காலம் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதற்குள் உணவகத்தை நடத்த கர்நாடக அரசு ஏதாவது உதவி புரிந்து மேலும் பல உணவகங்களை திறக்க உதவும் என்று நம்புகிறேன் என்றார் ராஜு.
இது எப்டி இருக்கு..! ஜெயலலிதாவுக்காக கர்நாடக அரசு காசு தரணுமாம்!












Click it and Unblock the Notifications