Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் அம்ருத்தா.. அவர் சொல்வது பொய்.. புகழேந்தி ஆவேசம்!

ஜெயலலிதா தனது தாய் எனக்கூறி அவரது பெயருக்கு அம்ருத்தா களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நான் ஜெயலலிதாவின் மகள் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும்.. அம்ருத்தா பரபர!- வீடியோ

    பெங்களூரு: ஜெயலலிதா தனது தாய் எனக்கூறி அவரது பெயருக்கு அம்ருத்தா களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருத்தா, ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் என்றும் இதனை உறுதி செய்ய ஜெயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம்கோர்ட் மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி நிராகரித்தது.

    இதையடுத்து தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அம்ருத்தா இறக்கும் தருவாயில் தனது வளர்ப்பு தந்தையான பார்த்த சாரதிதான் தான் ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் என்ற உண்மையை கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஜெயலலிதாவின் மகள் என்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

    அம்ருத்தா பொய் சொல்கிறார்

    அம்ருத்தா பொய் சொல்கிறார்

    அவரது இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தினகரனின் ஆதரவாளரும் அவர் அணியின் கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி ஜெயலலிதா மகள் என்று அம்ருத்தா பொய் சொல்கிறார் என தெரிவித்துள்ளார்.

    ஜெ.மகள் கிடையாது

    ஜெ.மகள் கிடையாது

    மேலும் அம்ருதா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அவர் ஜெயலலிதாவின் மகள் கிடையாது என்றும் கூறினார்.

    களங்கம் ஏற்படுத்த முயற்சி

    களங்கம் ஏற்படுத்த முயற்சி

    ஜெயலலிதாவை நாங்கள் மட்டும் அல்ல, கோடானகோடி தொண்டர்களும், பொதுமக்களும் அவரை அம்மா அம்மா என்று பாசத்தோடு அழைக்கிறார்கள் என்றும் புகழேந்தி தெரிவித்தார். பல நலத்திட்ட உதவிகளை செய்து தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அம்மா மீது களங்கம் ஏற்படுத்த அம்ருதா முயற்சிக்கிறார் என்றும் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    பொய் என்பதை நிரூபிப்போம்

    பொய் என்பதை நிரூபிப்போம்

    அம்ருதா வழக்கில் எங்களையும் இணைத்துக் கொண்டு வாதாடுவோம் என்றும் அவர் கூறியது பொய் என்பதை நிரூபிப்போம் என்றும் புகழேந்தி தெரிவித்தார். இவரது தாயார் சைலஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து ஜெயலலிதா எனது சகோதரி என்று கூறி வந்தார்.

    இது ஒரு ஏமாற்று வேலை

    இது ஒரு ஏமாற்று வேலை

    அவருடைய சகோதரி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டபோது உறவினர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார் என்றும் புகழேந்தி தெரிவித்தார். ஜெயலலிதாவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தையாவது ஆதாரமாக கொண்டு வாருங்கள் என்று கேட்டபோது அதுவும் இல்லை என்று கூறி விட்டார். அவர் இறந்த பிறகு அவரது மகள் அம்ருதா தற்போது ஜெயலலிதா எனது தாயார் என்று கூறி வருகிறார். இது ஒரு ஏமாற்று வேலை என்றும் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+