வைகைப்புயல் வடிவேல் மட்டும்தான் குடிப்பாரா?.. இனி நாங்களும் ஒட்டகப்பால்ல டீ குடிப்போம்ல!
அஹமதாபாத்: வைகைப்புயல் வடிவேலு. மட்டும் தான் ஒட்டகப்பாலில் டீ குடிப்பாரா.. இனி நாமும ஒட்டகப்பாலில் டீ குடிக்கமுடியும். அமுல் நிறுவனம் ஒட்டகப்பாலை இந்தியா முழுவதும் விரைவில் விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
வைகைப்புயல் வடிவேலு.. 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் ஒட்டகப்பாலில் டீ போடு என டீக்கடைக்காரரை கேட்பார். அதற்கு வடிவேலு துபாயில் ஒட்டகப்பாலில் தான் டீ போடுவார்கள் என கூறுவார். ஆனால் அதெல்லாம் இங்கு இல்லை என்பார்.
இப்படி நடிகர் வடிவேலு 'வெற்றிக்கொடி கட்டு' படத்தின் மூலம் ஒட்டகப்பால் கேட்டு 20 வருடங்கள் ஆகப்போகிறது.

அரபுநாடுகளில்
ஆனால் இதுவரை தமிழகத்தில் ஒட்டகப்பாலில் டீ குடிக்க முடியாத நிலையே இருந்து வந்தது. அப்படி ஒட்டகப்பாலில் டீ குடிக்க வேண்டும் என்றால் அரபு நாடுகளுக்குத்தான் போக வேண்டிய நிலையும் இருக்கிறது.

அமுல் நிறுவனம் முடிவு
இனி வடிவேலு மட்டுமல்ல நாமும் ஒட்டகப்பாலில் டீ குடிக்கலாம். எப்படி என்கிறீர்களா.. குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமல் நிறுவனம் ஒட்டகப்பாலை இந்தியா முழுவதும் விற்க முடிவு செய்துள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்று வரும் இந்த நிறுவனம் 200 மில்லி லிட்டர் பாட்டிலில் அடைத்து ஒட்டகப்பாலை விற்க திட்டமிட்டுள்ளது.

ரூ.25க்கு பால் விற்பனை
இது தொடர்பாக அமுல் நிர்வாக இயக்குனர் சோதி கூறுகையில், "இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் ஒட்டகப்பாலை அறிமுகம் செய்ய உள்ளோம். 200 மில்லி லிட்டர் பெட் பாட்டிலில் விற்க உள்ளோம். இதன் விலையை 25 ரூபாய் ஆக நிர்ணயம் செய்துள்ளோம். ஒட்டகப்பாலை விற்பதற்கான ஏற்பாடுகளை காந்தி நகரில் (அஹமதாபாத்) செய்து வருகிறோம். விரைவில் விற்பனை தொடங்கும்

ஜனவரியில் அறிமுகம்
முன்னதாக 500 மில்லி லிட்டர் ஒட்டகப்பாலை ரூ.50 என்ற விலையில் விற்பனைக்காக அமுல் நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்து இருந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications