முடிச்சுவிட்டீங்க போங்க.. மனைவி முன்பு 'அங்கிள்' என்று அழைத்த ஜவுளிக்கடை ஓனர்.. பொளந்து கட்டிய கணவர்
போபால்: மத்தியப்பிரதேசம், போபால் அருகே தனது மனைவியின் முன்பே அங்கிள், அங்கிள் என்று அழைத்து கடுப்படித்ததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் ஜவுளிக் கடை உரிமையாளரை வெளுத்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம். அதுவும் கணவர், மனைவியின் கண்களுக்கு காலம் முழுவதும் இளமையாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும். குழந்தைகள் அங்கிள் என்று அழைத்தாலே பல கணவன்மார்கள் கடுப்பாகிவிடுவார்கள்.

இந்நிலையில், போபாலில் மனைவியின் முன்பு 'அங்கிள்' என்று ஜவுளிக் கடையின் உரிமையாளர் அழைத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கடைக்காரரை பொளந்து கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் காயமடைந்த ஜவுளிக் கடை உரிமையாளர், வாடிக்கையாளர் அவரது நண்பர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், போபாலின் ஜட்கேடி பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் விஷால் சாஸ்த்ரி. இவருடைய கடைக்கு ரோஹித் என்ற வாடிக்கையாளர் தனது மனைவியுடன் புடவை வாங்குவதற்காக சனிக்கிழமை வந்துள்ளார். ஒவ்வொரு சேலைகளாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
நீண்ட நேரமாகப் பார்த்தும் சேலைகள் எதுவும் செட் ஆகாமல் இருந்துள்ளது. அப்போது, என்ன விலைக்கு நீங்கள் புடவையை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஜவுளிக் கடை உரிமையாளர் விஷால் கேட்டுள்ளார். அப்போது, ரோஹித் தான் ஆயிரம் ரூபாய்க்குள் புடவை எதிர்பார்ப்பதாகவும், அதற்கு மேல் இருந்தாலும் காட்டுங்கள் என்றும் கூறியுள்ளார்.
அப்போது அவர்களிடம் பேசிய விஷால், அங்கிள் அதிக ரேட்டிலும் புடைவையை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். அங்கிள் என்று கூறியதால் கடுப்படைந்த ரோஹித் அங்கிள் என்று கூப்பிடாதீர்கள் என்று விஷாலை எச்சிரித்துள்ளார்.
ரோஹித்துக்கும், விஷாலுக்கும் இடையே இதுதொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ரோஹித் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடையைவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து சில நபர்களுடன் ஜவுளிக் கடைக்கு வந்து விஷாலை கடையில் இருந்து சாலைக்கு இழுத்து வந்து தடி, பெல்ட்டால் அவரை தாக்கியுள்ளார்.
பின்னர், அங்கிருந்து ரோஹித் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விஷால், ரோஹித் உள்ளிட்டோர் மீது புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, விஷால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில், ரோஹித் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications