"சனாதனத்தை இளைஞர்கள் நம்பனும்".. அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திடீர் பாதயாத்திரை.. என்ன காரணம்?
காந்தி நகர்: பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திடீரென்று பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து துவாரகா வரை அவர் பாதயாத்திரை புறப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கு தற்போது 29 வயது ஆகிறது. கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொண்டார். அவர் ராதிகா மெர்ச்சன்ட்டை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் 2024 ஜுலை 12ம் தேதி நடந்தது.

திருமண விழா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் நம் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், வெளிநாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இவரது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி பல நூறு கோடி செலவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது
இந்நிலையில் தான் ஆனந்த் அம்பானி திடீரென்று பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து சுமார் 140 கிமீ தூரம் உள்ள துவாரகா நோக்கி அவர் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். தினமும் இரவில் 10 முதல் 12 கிமீ தொலைவை அவர் நடக்கிறார். பலத்த பாதுகாப்புடன் அவர் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். ஆனந்த் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்கள் மற்றும் குஜராத் போலீசார் இணைந்து அவரது பாதயாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். ஆனந்த் அம்பானி அருகே யாரையும் நெருங்க விடாமல் பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டு வருகிறது. ஆனந்த் அம்பானியின் இந்த திடீர் பாதயாத்திரையின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
அதாவது ஆனந்த் அம்பானிக்கு தற்போது 29 வயது ஆகிறது. மார்ச் 10ம் தேதி அவரது பிறந்தநாளாகும். தனது 30வது பிறந்தநாளையொட்டி அவர் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரை மூலம் அவர் ஜாம் நகரில் இருந்து துவாரகா சென்று அங்குள்ள துவாரகேஷ் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக தான் அவர் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.
தற்போது வரை அவர் மொத்தம் 60 கிமீ தொலைவை பாதயாத்திரை மூலம் கடந்துள்ளார். இன்று அவர் தனது 5வது நாள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரையை இன்னும் 5 நாட்களில் அவர் முடிக்க உள்ளார். அதன்பிறகு அவர் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்து பிறந்தநாளை கொண்டாட உள்ளார். முன்னதாக பாதயாத்திரையின் ஒருபகுதியாக வழியில் உள்ள கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்த பாதயாத்திரை பற்றி ஆனந்த் அம்பானி கூறுகையில், ‛‛சனாதன தர்மத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன். கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு பலம் தந்துள்ளது. நான் 5 நாட்களாக நடந்து வருகிறேன். அடுத்த ஐந்து நாட்களில் நான் துவாரகாதீஷ் கோவிலை அடைவேன். நான் பாதயாத்திரை மேற்கொள்வது இதுதான் முதல் முறை. இளைஞர்கள் கடவுளை மதிக்க வேண்டும். சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் இருக்கும்போது நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது'' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications