மருத்துவ கல்லூரி வழக்கு: சி.பி.ஐ. நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி அன்புமணி சுப்ரீம் கோர்ட்டில் மனு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்த வழக்கில் தம் மீதான சி.பி.ஐ. நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அமைச்சராக இருந்தபோது உத்தரபிரதேச மாநிலத்தின் ரோகில் காண்ட் மருத்துவ கல்லூரி, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இன்டக்ஸ் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக அன்புமணி ராமதாஸூக்கு எதிராக சி.பி.ஐ. 2 வழக்குகள் பதிவு செய்தது.

Anbumani moves SC to seek stay of the proceedings in corruption case

இந்த வழக்குகளை விசாரித்து வரும் டெல்லி நீதிமன்றம் நவம்பர் 2-ந் தேதி அன்புமணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்புமணி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தம் மீதான 2 வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்குமாறு கோரி இருந்தார். ஆனால் அன்புமணியின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் தம் மீதான 2 வழக்குகளை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி அன்புமணி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+