For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தஞ்சை உள்பட 3 தொகுதி தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி ஜைதியிடம் அன்புமணி நேரில் வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற உள்ள 3 தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் நடைபெற உள்ள தேர்தலை ரத்து செய்ய செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அன்புமணி மனு அளித்துள்ளார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு பணம் வழங்கியிருப்பதால் அந்த தொகுதிகளுக்கு இன்று நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 Anbumani ramadoss urges to cancel elections in 3 constituencies

டெல்லியில் வெள்ளிக்கிழமை அன்புமணி ராமதாஸ் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து மனு வழங்கினார். அதில், 3 தொகுதிகளிலும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கூறப்பட்டிருந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, மூன்று தொகுதிளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அனைத்து வாக்காளர்களுக்கும் திமுக, அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் புகார் அளித்துள்ளன. தேர்தல் நியாயமாக நடக்காது எனவே தலைமை தேர்தல் ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறினார்.

English summary
PMK youth wing leader Anbumani ramadoss urges election commission to cancel elections in thiruppakrankundram aravakurichi and tanjore constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X