தெலுங்கானா மசோதா.. ஆந்திர சட்டசபையில் 3–வது நாளாக கூச்சல்–குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

Andhra assembly proceedings disrupted over Telangana bill issue
ஹைதராபாத்: தெலுங்கானா மசோதா விவகாரத்தால் ஆந்திர மாநில சட்டசபையில் 3வது நாளாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

தனித் தெலுங்கானா மசோதா ஆந்திர மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சபை 2 நாட்களும் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் 3-வது நாளாக சட்டசபை நேற்று கூடியது. அப்போது தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு சபையின் மையப்பகுதிக்கு சென்று ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் மனோகர் அவையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடியதும் கூச்சல்-குழப்பம் நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல், ஆந்திர சட்ட மேலவையிலும் அமளி நீடித்ததால், மேலவைத்தலைவர் சக்ரபாணி நாள் முழுவதும் சபையை ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+