ஆந்திராவை நொறுக்க வரும் பாய்லின்.. ஸ்டிரைக் செய்த அதிகாரிகள் பணிக்குத் திரும்புகிறார்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிராக போராட்டம் மற்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஆந்திராவை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் பாய்லின் புயல் காரணமாக பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனராம்.
ஆந்திர மாநில அரசும் பாய்லின் புயலின் ஆபத்திலிருந்து தனது மாநில மக்களைக் காக்க அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
பாய்லின் புயல் தாக்கக் கூடிய பகுதிதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் சூறாவளியிலிருந்து பாய்லின் புயலுக்கு
தெலுங்கானா என்ற அரசியல் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் ஆந்திர மாநிலம் தற்போது பாய்லின் புயலின் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில்
அடுத்த 48 மணி நேரத்தில் புயல் தாக்க்க கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து புயல் தாக்கக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஸ்டிரைக்கிலிருந்து பிரேக்
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஆந்திராவில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பெருமளவில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால் பல பகுதிகளில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புயல் வருவதால் பலர் ஸ்டிரைக்கிலிருந்து தற்காலிகமாக விலகி பணிக்குத் திரும்புகின்றனராம்.

13 மாவட்டங்களில் மின்சாரம் இல்லை
மின்வாரி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களிலும் மின் விநியோகம் படு மோசமாக உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை. இதனால் மருத்துவமனைகள், ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் புயல் வேறு அங்கு பீதியைக் கிளப்பியுள்ளது.

இக்கட்டான நிலையில் கை கொடுப்போம்
இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள புயல் அபாயம் காரணமாக மக்களுக்கு பாதிப்பு வராத வகையில் தற்போதைக்கு பணிக்குத் திரும்புவதாக பல வருவாய்த்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முழு அளவில் பணியாளர்கள் பணிக்குத் திரும்பாததால் அரசுத் தவித்துக் கொண்டிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications