ஆந்திராவில் சட்ட மேலவை கலைப்பு- ஜெகன் மோகன் ரெட்டி அரசு அதிரடி!
அமராவதி: ஆந்திராவில் சட்ட மேலவையை கலைப்பதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
ஆந்திரா முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்பதை மாற்றினார்.

ஆந்திராவின் சட்டசபை அமராவதியிலும் நிர்வாக தலைநகர் விசாகப்பட்டினத்திலும் நீதித்துறை தலைநகர் கர்னூலிலும் இருக்கும் என சட்டத்தை நிறைவேற்றினார் ஜெகன் மோகன் ரெட்டி. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்த அதிரடியாக ஆந்திராவின் சட்ட மேலவையை கலைக்க ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை இன்று முடிவை எடுத்தது. இதுவும் ஆந்திரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
2018-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலின் போது மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளைக் கைப்பற்றியது. பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் 23 இடங்களில்தான் வென்றது.
ஆந்திரா சட்ட மேலவையில் மொத்தம் 58 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தெலுங்குதேசம் கட்சிக்கு 26 பேரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 9 பேரும்தான் உள்ளனர். பாஜகவின் 3 எம்.எல்.சிக்களும் மேலவையில் உள்ளனர். தற்போது 4 எம்.எல்.சி. இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த மேலவையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னமும் பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியதிருக்கும்.
இதனால் ஆந்திரா சட்டசபையில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு நிறைவேற்றும் சட்டங்கள் மேலவையில் முடங்கிக் கிடக்க வாய்ப்புகள் அதிகம். ஆகையால் மேலவையையே கலைப்பது என அதிரடியாக முடிவெடுத்துவிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திராவில் 1983-ல் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்குதேசம் 1985-ல் சட்ட மேலவையை கலைத்தது. 2007-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications