2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும்- சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் போட்டியிட முடியும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை அண்மையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீக்கிய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி மிக குறைவாக இருக்கிறது என்பது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவலை. ஆந்திராவில் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்; வீடுகளில் ஒன்று அல்லது 2 குழந்தைகள் மட்டுமே இருப்பதாலேயே முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தெரிவித்திருந்தார் சந்திரபாபு நாயுடு.

இதனால் 2 குழந்தைகளுக்கு மேல் கூடுதலாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அப்படி 2 குழந்தைகளுக்கு மேல் குழந்தைகளைப் பெறும் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். அத்துடன் உள்ளாட்சி அமைப்புகளில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் போட்டியிட விதிக்கப்பட்ட தடையையும் கூட ரத்து செய்திருந்தார் சந்திரபாபு நாயுடு.
இந்த நிலையில் திருப்பதி அருகே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி அப்படி இல்லை. 2 குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்ற தம்பதியினர் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம். அப்படி அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும்.
வட இந்தியாவில் குடும்ப கட்டுப்பாட்டு விகிதம் நிலையானதாக இருக்கிறது. ஒரு குழந்தையைப் பெறுகிற நிலைமைகூட தற்போது மாறி வருகிறது. இருவரும் சம்பாதித்தாலும் குழந்தையே தேவை இல்லை என்கிற முடிவிலும் சில தம்பதிகள் இருக்கின்றனர். இது மக்கள் தொகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இப்படி செய்ததால் பணிகளுக்கு நாம் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. நமது நாட்டிலும் அப்படியான ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications