கடவுள் ஆசிர்வாதத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும்... ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி விருப்பம்!!
விஜயவாடா: ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். விஜயவாடாவில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பதவி ஏற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டியை மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். அப்போது குங்கும பொட்டுடன் ஸ்டாலின் பேசியது ஆச்சரியத்தை தந்தது.
இதனிடையே, விழாவில் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "கடவுள் ஆசிர்வாதத்துடன் ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்," என்று தனது விருப்பத்தை கூறினார். இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்ரெட்டியின் இந்த பேச்சு, தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் நோக்கர்களையும் ஜெகன்மோகன் ரெட்டியின் நகர்வுகளை உற்று நோக்க வைத்துள்ளது.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 10 ஆண்டுகால முயற்சியில் ஆந்திராவின் முதல்வராக இன்ற அரியணை ஏறி உள்ளார். ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
அங்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்தது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications