ஆந்திரா என்கவுண்டர்: 20 தமிழர்களின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்
ஹைதராபாத்: ஆந்திர என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக கடந்த 6ம் தேதி 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். தற்காப்புக்காக நடத்தப்பட்ட என்கவுண்டர் என ஆந்திர போலீசார் கூறினாலும், இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட படுகொலை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆந்திர போலீசார் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
உறவினர்களின் சந்தேகத்தின் அடிப்படையில் கோர்ட் உத்தரவுப்படி, சென்னையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட 6 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் 22ம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications