ஆந்திரா முழுவதும் மணல் எடுக்க தடை.. மணலை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம்.. அரசு எச்சரிக்கை
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் மணல் எடுக்க விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி அறிவித்துள்ளார். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் இருந்த போது இலவசமாக மணல் அள்ளலாம் என உத்தரவிடப்பட்டு இருந்ததது.
ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆட்சி இருருந்த போது எடுத்த பல முடிவுகளை புதிதாக வந்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் முழுவதும் எந்த கட்டணமும் இன்றி இலவசமாக மணல் எடுத்து செல்லலாம் என முந்தைய தெலுங்குதேசம் அரசு அறிவித்து இருந்தது. இதனால் மிகப்பெரிய அளவில்மணல் முறைகேடு ஆந்திராவில் நடைபெற்றது. இது தொடர்பான விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிட்டார். மேலும் ஆந்திராவில் மணல் அள்ளவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுபற்றி சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி நேற்று துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திராவில் இன்று முதல் மணல் எடுக்கும் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இனி (நேற்று) ஆந்திர மாநிலம் முழுவதும் மணல் எடுக்க உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. எந்த இடத்திலாவது மணல் எடுத்தால் அல்லது மணலை கடத்தி கொண்டு செல்ல முயன்றால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். மணலைக் கொண்டு செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய அந்தந்த மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஜூலை 1ம் தேதி முதல் மணல் எடுப்பதற்கான புதிய பாலிசி திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. சுரங்க துறையின் மூலமாக கடந்தாண்டு ரூ2643 கோடி மட்டுமே வருவாய் வந்தது. மணல் விற்பனையை இலவசமாக அறிவிக்கப்பட்டதால் அரசுக்கு எந்தவித வருவாயும் வரவில்லை. இதனால் தனிப்பட்ட நபர்களே லாபம் அடைந்துள்ளனர். ஊழலற்ற முறையில் மணலை அரசே விற்பனை செய்யும். இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் புதிய பாலிசி திட்டம் கொண்டு வரப்படும்" இவ்வாறு கூறினார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications