திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்... தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கரக்கம்பாடியில் ஆந்திர போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக திருவள்ளூரைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பதி - ரேணிகுண்டா அருகேயுள்ள கரக்கம்பாடி வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்த முயற்சிப்பதாக, ரேணிகுண்டா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை வனப்பகுதிக்கு போலீஸார் விரைந்து சென்றபோது, ஒருவர் பிடிபட்டார். 30 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதையடுத்து லாரி மூலம் கடத்தப்பட இருந்த 60 செம்மரக் கட்டைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ரேணிகுண்டா போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications