ஆந்திர பஸ் விபத்து: எரிந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர். அந்த பேருந்தில் எரிந்து கிடந்த தாயின் மடியில் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை பார்த்து மீட்பு பணியினர் நொந்துவிட்டனர்.

பெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு 10 மணிக்கு ஹைதராபாத் கிளம்பியது. பேருந்து இன்று காலை 5.10 மணிக்கு ஆந்திர மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பெங்களூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் பேருந்தின் டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்தது.

Andhra Pradesh bus tragedy

இதில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதற்கிடையே பேருந்தின் டிரைவர், கிளீனர் மற்றும் 4 பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பிவிட்டனர்.

பலியானவர்களில் 5 பேர் பெங்களூரில் உள்ள ஐபிம், கூகுள் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட ஹைதராபாத்துக்கு சென்றனர்.

இந்நிலையில் பேருந்தில் இருந்து 45 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்து கிடந்த உடல்களை பார்த்து மனம் நொந்தனர். அதிலும் எரிந்த நிலையில் இருந்த தாயின் மடியில் கருகிய குழந்தை கிடந்ததை பார்த்து மீட்பு படையினர் பதைத்துவிட்டனர்.

இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 33 பேர் ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+