ஆந்திராவை பிரிக்க மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை பிரிக்க வகை செய்யும் "ஆந்திரா மறுசீரமைப்பு மசோதா"வை அம்மாநில சட்டசபை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அம்மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, மாநிலத்தில் உள்ள 70%-80% மக்கள் பிரிவினையை விரும்பவில்லை. இதனால் நாம் அம்மாநிலத்தைப் பிரிக்க கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications